கொழும்பில் அத்தியாவசிய திருத்தப் பணிகளால் நீர் வெட்டு!

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் அத்தியாவசிய திருத்தப் பணிகளால் நீர் வெட்டு!

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 5 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கொழும்பு 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.